கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் சரியாக 1900 வருடங்களில் அதிரைப்பட்டினத்திலிருந்து குறிப்பாக நெசவுத்தெரு வாசிகள் தொழில் மற்றும் சம்பாத்தியம் தேடி பர்மா நாட்டை நோக்கி படையெடுத்தனர் (அன்று அவர்கள் துவங்கி வைத்தது இன்றும் தொடர்கிறது. ஆனால், நாடுகள் வெவ்வேறு), சொந்த தொழில் செய்தும், சம்பளத்துக்கு வேலை செய்தும் நல்ல சம்பாத்தியம் செய்தார்கள். நிறைய பணம் சம்பாதித்தார்கள். ஓரளவு பணம் சேர்ந்தவுடன் நாம் பிறந்து வளர்ந்த ஊருக்கு / தெருவுக்கு அதன் முன்னேற்றத்திற்காக ஏதாவது செய்யவேண்டும் என்ற நோக்கம் (இன்றும் முஹல்லாவுக்கு ஒரு அமைப்பு இருந்து ஊரில் பல நல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்) அனைவரிடையே இருந்தது. இவர்களின் முயற்சியால் பொது வசூல் முலம் சில ஆயிரங்கள் சேர்ந்தன. அந்த பணத்தை ஊருக்கு எடுத்து சென்று எதாவது நல்ல காரியங்களில் ஈடுபடுத்த முயற்சி செய்தார்கள். அதன் விளைவாக தெருவாசிகள ஒன்றுகூடி விவாதம் செய்தார்கள்.
அதன்படி 1910 ம் வருடங்களில் அம்பலகார வீடு இபுறாகீம் ஷாகிப் அவர்கள் தலைமையில் கமிட்டி அமைக்கபட்டு எந்த விதமான நல்ல காரியம் செய்வது என்று ஊரில் உள்ள மற்ற தெரு பெரியவர்களிடம் யோசனை கேட்கப்பட்டது. அதில் சிலர் தோப்பு-வயல் வாங்கி போடுங்கள் வரும் சந்ததியர்களுக்கு பயன்படும் என்று ஆலோசனை சொன்னார்கள். மற்றவர்கள தெரு முஹல்லாவுக்கு ஒரு சங்கம் கட்டுங்கள் அதுவே சமுதாயக் கூடமாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் சொன்னார்கள்.
இரு வேறு கருத்து எழுந்ததால் தெருவிலும் இரன்டு பிரிவாக ஆகி சங்கமா, தோப்பா எனறு குழப்பத்தில் இருந்து கொண்டிருந்தது. எனவே இதற்கு சுமுக தீர்வுக்காண மேலும் வெவ்வேறு தெரு நபர்களிடம் ஆலோசனை கேட்கப்பட்டது. அந்த ஆலோசனை படி சங்கம் கட்டினால் அது ஒரு சமுதாய கூடமாக அனைத்து மக்களும் பயன்படுத்த ஏதுவாக அமையும் என்ற மெஜாரிட்டியான நபர்களின் கருத்தால் சங்கம் கட்டுவது என்று முடிவாகியது. அவ்வண்ணமே நெசவுத்தெரு வாழ் பர்மாவாசிகளுக்கு தெரிவிக்கப்பட்டு மஆதினுல் ஹஸனாத்தில இஸ்லாமிய சங்கம் என்ற பெயரையும் அங்கேயே தீர்மானித்தார்கள்.
அதன்படி 1910 ம் வருடங்களில் அம்பலகார வீடு இபுறாகீம் ஷாகிப் அவர்கள் தலைமையில் கமிட்டி அமைக்கபட்டு எந்த விதமான நல்ல காரியம் செய்வது என்று ஊரில் உள்ள மற்ற தெரு பெரியவர்களிடம் யோசனை கேட்கப்பட்டது. அதில் சிலர் தோப்பு-வயல் வாங்கி போடுங்கள் வரும் சந்ததியர்களுக்கு பயன்படும் என்று ஆலோசனை சொன்னார்கள். மற்றவர்கள தெரு முஹல்லாவுக்கு ஒரு சங்கம் கட்டுங்கள் அதுவே சமுதாயக் கூடமாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் சொன்னார்கள்.
இரு வேறு கருத்து எழுந்ததால் தெருவிலும் இரன்டு பிரிவாக ஆகி சங்கமா, தோப்பா எனறு குழப்பத்தில் இருந்து கொண்டிருந்தது. எனவே இதற்கு சுமுக தீர்வுக்காண மேலும் வெவ்வேறு தெரு நபர்களிடம் ஆலோசனை கேட்கப்பட்டது. அந்த ஆலோசனை படி சங்கம் கட்டினால் அது ஒரு சமுதாய கூடமாக அனைத்து மக்களும் பயன்படுத்த ஏதுவாக அமையும் என்ற மெஜாரிட்டியான நபர்களின் கருத்தால் சங்கம் கட்டுவது என்று முடிவாகியது. அவ்வண்ணமே நெசவுத்தெரு வாழ் பர்மாவாசிகளுக்கு தெரிவிக்கப்பட்டு மஆதினுல் ஹஸனாத்தில இஸ்லாமிய சங்கம் என்ற பெயரையும் அங்கேயே தீர்மானித்தார்கள்.
(முக்கிய குறிப்பு: இதற்கு பதில் ஒரு பள்ளிவாசல் கட்டி தொழ ஏன் ஆலோசிக்கவில்லை என்று நாம் நினைக்கலாம் ஆனால் இன்று உள்ள “மரைக்காயர் பள்ளி” நெசவுதெரு முஹல்லாவின் எல்லைக்குள் அடங்கி இருந்த காரணத்தினால்அது பற்றி யாரும் விவாதிக்கவில்லை)
சரியாக 1913-16 ஆம் வருடங்களில் சங்கத்திற்கு அஸ்த்திவாரம் போடப்பட்டது. சங்கம் கட்ட மண் குளத்திலேயே (மரைக்கா பள்ளிக்கும் சங்கத்துக்கும் இடையில் உள்ளது) வெட்டபட்டது..மரஙகள் மற்றும் இரும்பு பீம் பர்மாவிலிருநது நேரடியாக கப்பலில் வந்தது. மரங்கள் மற்றும் பீம் களை இன்று கிரேனின் உதவியால் மட்டுமே சாத்தியம் ஆனால் அந்த உதவி இல்லாமலே கட்டி முடித்தார்கள்.
சரியாக 10 ஆண்டில் (கட்டிடப்பொருட்கள் பர்மா மற்றும் கேரளாவிலிருந்து வந்து சேருவதுக்கு அதிகநாள் எடுத்துக் கொண்டதாம்). 1926ம் ஆண்டு ஆரம்பத்தில் சங்க கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழாவுக்கு தயாரானது. இதன் திறப்பு விழாவை மிரமாண்டமாக செய்தார்கள். விழாவுக்கு பர்மாவிலிருந்து எல்லாரும் ஊர் வந்தார்கள். அவர்களை ரயில்வே ஸ்டேஷன் சென்று பூமாலை போட்டு வரவேற்று அழைத்து வந்தார்கள். பிறகு திரும்பி போகும் போதும் மாலை போட்டு அனுப்பி வைத்தார்களாம். இதே மரியாதைய ஊர் வந்து செல்லும் அனைவருக்கு செய்தார்கள், இது சில காலம் தொடர்ந்ததாம்..
சங்கத்தின் முதல் தலைவர் இபுறாகிம்ஷா அவர்களாலும்., செயலாளர் கு.மு. காசிம். அவர்களாலும் நிர்வாகக்குழு அமைக்கபட்டது
சஙகத்தின் சார்பாக எல்லா வருஷமும் மீலாதுநபி விழா சிறப்பாக கொண்டாடுவார்கள். அதன்படி ஒரு வருடம் மீலாது விழாவுக்கு அறிஞர் அண்ணா சிறப்பு பேச்சாளராக அழைப்பு விடுக்கப்பட்டது. அன்று இரவு விடிய விடிய மழை பெய்த காரணத்தால் நடு இரவு தாண்டி வந்து சேர்ந்தார். அதற்குப்பிறகு விழா ஆரம்பித்து சிறப்பாக முடிந்தது, மேலும் விழா முடிந்தவுடன்தான் அண்ணாவுடன் அனைவருக்கும் உணவு பரிமாறப்பட்டு இரவு விருந்து நடந்தது. இந்த மீலாது விழா 1985 வரை அதே சிறப்புடன் நடந்தது.
அதிராம்பட்டினத்தில் முதன்முதலில் நெசவு தெருவில்தான் சஙகமும், ஜமாத்தும் உருவானது. அன்று எல்லா வருடமும் மவுளுது நடக்கும், அதன் கடைசி நாள் அன்று பெரிய அளவில் ஒமல் சோறு தப்ரூகாக வழங்கபடும். (இன்று சந்ததியினரிடையே விழிப்புணர்வு ஏற்பட்டு முடிந்தளவு வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது)
சங்கத்தின் சிறப்பு
உன் கடமையை செய்.
எழுதப்பட்டிருந்த பொன்மொழிகளில் மேலே உள்ளது ஒரு உதாரணம்
சங்க கட்டிடத்தை பாதுகாப்பதற்காக காவலுக்கு ஆள் போடபட்டது. அவரை எல்லாரும் சங்கத்து அப்பா என்று அழைத்தார்கள்.
இன்றும்... சங்க கட்டிடத்தில் நடக்கும் சில முக்கிய விடயங்கள்....
சங்க கட்டிடம் திறப்புவிழா 1926ம் வருடம் கண்டு செயல்பட தொடங்கி கடந்த 86 வருடங்களாக இந்த சங்கத்தை நிர்வகித்து வரும் தெரு ஜமாத் தலைவர்கள் விபரம்....
சங்க தலைவர்கள்
சங்கத்தின் சிறப்பு
- கட்டிட அமைப்பு களிமண்ணால் கட்டபட்டது.
- சுவர்களுக்கு சுண்ணாம்பு மற்றும் முட்டை கலந்து பூச்சு பூசப்பட்டது.
- பாடர்கள் (சுவர் ஓரங்கள்) வர்ண கலர்களால் வண்ணம் செய்து பல பொன்மொழிகள் எழுதபட்டு இருக்கும்.
உன் கடமையை செய்.
எழுதப்பட்டிருந்த பொன்மொழிகளில் மேலே உள்ளது ஒரு உதாரணம்
- சங்க கட்டிடம் முழுவதும் தேக்கு மரங்கள் , ஓடுகள் கேரளாவிலிருந்து வந்தது..
சங்க கட்டிடத்தை பாதுகாப்பதற்காக காவலுக்கு ஆள் போடபட்டது. அவரை எல்லாரும் சங்கத்து அப்பா என்று அழைத்தார்கள்.
இன்றும்... சங்க கட்டிடத்தில் நடக்கும் சில முக்கிய விடயங்கள்....
- நோன்பில் காலை முதல் லுஹர் வரை பெண்களுக்கான பயான்.
- இரவில் பெண்களுக்கான தராவீஹ் தொழுகை.
- நோன்பு கஞ்சி காய்ச்சி ஊர் முழுதும் வினியோகம்.
- வாரந்தோறும் ஜனாப் ஹாஜி (அதிரை கவிஞர்) மு.மு தாஹா அவர்களின் பெண்களுக்கான சிறப்பு பயான்.
- நாள் தோறும் காலை/மாலை சிறுவர்களுக்கான குரான் மதரஸா.
- நாள் தோறும் இரவில் பெண்களுக்கான சிறப்பு குரான் & ஹதீஸ் மதரஸா
- திருமண நிக்காஹ் வைபோகம்.
- திருமண விருந்து சமையல் மற்றும் விருந்து சாப்பிடும் கூடம்.
- தெரு ஜமாத் கூட்டம் நடக்கும் இடம்.
- ரேஷன் பொருள் விணியோகம் அதிக வருஷம் இருந்த்து. உணவுப்பொருட்களின் இருப்பிடமாக (Stock) இருந்ததால் எலி மற்றும் அனைத்து ஜந்துக்களால் கட்டிடம் பழுதடைந்தபடியால் வேறு இடத்துக்கு மாற்றம் செய்யப்பட்டது.
- அரசாங்கம் சம்பந்தப்பட்ட அலுவல்கள் (ஓட்டு கணக்கெடுப்பு, தடுப்பூசி, போலியோ, சிகிச்சை முகாம், மற்றும் பல....)
சங்க கட்டிடம் திறப்புவிழா 1926ம் வருடம் கண்டு செயல்பட தொடங்கி கடந்த 86 வருடங்களாக இந்த சங்கத்தை நிர்வகித்து வரும் தெரு ஜமாத் தலைவர்கள் விபரம்....
சங்க தலைவர்கள்
- இபுறாகிம்ஷா
- கு.மு. காஷிம்
- மு.மு.மீராஷாகிபு
- மு.செ. பெரியதம்பி
- மீ.ப. பக்கீர் முகமது
- மு.செ. சேகுதாவூது
- மு.சே. சேக்காதியார்
- மு.சே. சம்சுதீன்.
- அ.யி.செ. முகமது தம்பி
- அ.யி.செ உமர்
- மு.செ. அப்துல் சமது.
- கா.மு.கலுஙகு முகமது
- மு.மு. சம்சுதீன்
- ப.அ.அப்துல் கரீம்
- மு.சே. நூர் முகமது
- செ.மு.முஸ்தபா
- கா.மு.அகமது ஜலாலுதீன்
- ப.அ.அப்துல் ஸமது
- மு. மீ. தாஹா
- மு. சேகுதாவுது
- அ.யி.செ. முகைதீன் அப்துல் காதர்
- அ.யி.செ. அப்துல் கபூர்
- அ. முகமது முகைதீன்.
தகவல் உபயம்: ஜனாப். ஜெகபர் அலி மற்றும் நெசவுதெருவாசிகள்
நன்றி:அதிரைநிருபர்
7 comments:
Ebrahim Ansari சொன்னது…
அறியத் தகுந்த அறிந்து மகிழத்தக்க அருமையான வரலாற்றுக் குறிப்புகள்.
அண்ணா அவர்கள் கலந்து கொண்ட மீலாது விழாக் கூட்டம் எனது நினைவில் இருக்கிறது. அதே போல் மர்ஹூம் இக்ராம் டாக்டர் தலைமையில் மர்ஹூம் பேராசிரியர் கா. அப்துல் கபூர் அவர்கள் கலந்து கொண்ட மீலாது விழாவும் நினைவில் இருக்கிறது. இரண்டு நிகழ்ச்சிகளும் மரைக்காயர் பள்ளியின் வாயிலில் நிகழ்ந்தது. அங்கிருந்து நடுத்தெரு ரோடு சந்திப்புவரை மக்கள் கூட்டம். அழியாத கோலங்கள் .
நன்றி ஜனாப். அப்துல் மாலிக் அவர்களே!
Reply திங்கள், நவம்பர் 12, 2012 6:43:00 am
ஒரு அதிரை வரலாற்றுப் பதிவு!
'மாஆதினுல்...' இல்லை. 'மஆதினுல்' என்பதே சரி.
//அதே போல் மர்ஹூம் இக்ராம் டாக்டர் தலைமையில் மர்ஹூம் பேராசிரியர் கா. அப்துல் கபூர் அவர்கள் கலந்து கொண்ட மீலாது விழாவும் நினைவில் இருக்கிறது.// -இப்ராஹீம் அன்சாரி
இல்லை. அந்த விழா, நான் உயர்நிலைப்பள்ளி மாணவனாக இருந்தபோது நாங்கள் 'இக்பால் நூலகம்' சார்பாக நடத்திய 'அல்லாமா இக்பாலின் நூற்றாண்டு விழா.' சின்னப் பையன்கள் நடத்திய நூற்றாண்டு விழா...!
Reply திங்கள், நவம்பர் 12, 2012 7:54:00 am
அர அல சொன்னது…
அதிரை பட்டினத்து வரலாற்றில் ம ஆதினுள் ஹசனாத் சங்க செய்தியும் ஒரு அரிய தகவலை அறியத் தந்த சகோ அப்துல் மாலிக் அவர்களுக்கு மிக்க நன்றி இதுபோல மற்றைய சங்க செய்திகளை தொகுத்தால் தெரிந்து கொள்ளலாமே?சரி ம ஆதினுள் ஹசனாத் என்பதன் பொருள் என்ன என விளக்க முடியுமா ?
Reply திங்கள், நவம்பர் 12, 2012 8:41:00 am
Adirai Ahmad சொன்னது…
//மஆதினுல் ஹசனாத் என்பதன் பொருள் என்ன என விளக்க முடியுமா?//
معدن என்றால் சுரங்கம் என்று பொருள். معادن என்பது, அதன் பன்மை (சுரங்கங்கள்). حسنات = நன்மைகள். ஆகவே, 'நன்மைகளின் சுரங்கங்கள்' எனப் பொருள் கொள்ளலாம்.
Reply திங்கள், நவம்பர் 12, 2012 5:18:00 p
Ebrahim Ansari சொன்னது…
ஜனாப் அஹமது காக்கா அவர்கள் சொல்வது சரியே. அந்த விழா மரைக்காயர் பள்ளி வாசலில் நடந்ததும் அப்துல் கபூர் சாஹிப் அவர்கள் இக் - பால் என்று விளக்கம் சொன்னதும் பசுமரத்தாணிபோல் நினைவில் உண்டு காக்கா.
Reply திங்கள், நவம்பர் 12, 2012 5:14:00 pm
பதிவை இங்கு பதிவிட்டமைக்கும் கருத்திட்ட அனைவருக்கும் உள்ளார்ந்த நன்றி, ஜஜாக்கல்லாஹ்...
Hello. And Bye.
Post a Comment