Loading...
Tuesday 16 November 2010

சன் டிவி நிஜத்தில் காயல்பட்டினம்!

காயல்பட்டினம் அதிரைப்பட்டினத்துடன் தொடர்புள்ள ஊர்.அந்த வகையில் அதிரைவரலாற்று வலைப்பூவில் இந்த காணோளியை இடம்பெற செய்துள்ளோம்.
சன் தொலைக்காட்சியின் முயற்ச்சிக்கு எமது வாழ்த்தும் நன்றியும்.

எஸ்.கே.காக்கா என்ற ஷாஹுல் ஹமீது காக்கா அவர்கள் உள்பட பலர் நுட்பமான முறையில் வர்ணனை செய்துள்ளனர்.

அதிரைப்பட்டினத்திற்கும் ஒரு ஆவனப்படம் எடுத்தால் நமது வரலாறு காணோளியாக மக்களிடம் இன்னும் போய் சேரும்!
அன்பு வாசகர்களே உங்கள் கருத்து என்ன?

12 comments:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

காயல்பட்டினத்தின் நிஜம் சன் சின்னத்திரையின் ஒளிபரப்பை கண்டு கொண்டிருக்கும்போது நாமும் அதிரைப்பட்டினம் பற்றி ஆவனப்படம் உருவாக்கினால் என்ன என்றும் எண்ணம் தோன்றியதை இங்கே மறைக்க முடியவில்லை...

திரையரங்குகள் இல்லை, மாடிவீடுகளில் கவுந்த குடைகள் (dish) கண்களில் படவில்லை, காவல் நிலையம் இல்லை, பைத்துல்மாலின் நடைமுறை, பெண்களுக்கென்று தனி நடைபாதை வழிகள்.. நிறைய நல்லவைகள் சில சில குறைகளை மறைத்து விட்டது நிஜமே !

காயல்பட்டினத்து மக்கள் நிஜத்தின் வெளிச்சத்துக்கு வந்துவிட்டார்கள், சரி அதிரைப்பட்டினம் எப்போது ?

Unknown said...

காயலைப்போல் அதிரைக்கும் ஓர் ஆவணப் படம் எடுத்தால் என்ன என்ற நண்பர்களின் ஆதங்கம் புரிகின்றது. ஆனால், அப்படி எடுக்கப்படும் ஆவணப் படத்தின் பெரும் பகுதி நிஜத்தின் நிழலாக இருக்குமா? இருக்க முடியாது என்பதே நிஜம்(உண்மை). பிறகு எதற்கு ஆவணப் படம்? நமக்கு ஆவணங்கள் போதும்; ஆவணப் படங்கள் வேண்டாம். படம் என்று வரும்போது, மைனஸ்கள் மறைக்கப்பட்டு, வெறும் ப்லஸ்களாகவே காட்டப்படுவதைப் பெரும்பாலான ஆவணப் படங்களில் நாம் பார்க்கிறோம். மேலும், சமூகத்தின் எல்லா அமைப்பினரையும் பிரதிபலிக்கத் தவறிவிடுகின்றனர். காயலின் ஆவணப் படத்திலும் அது நடந்துள்ளதை நான் கண்டேன்! எனவே, அதிரையின் புகழை, பெருமையை ஆவணங்களால் மட்டுமே நிறுவுவோம்; ஆவணப் படங்கள் வேண்டாமே?!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

நிஜம் என்றால் கசக்கும் உண்மையும் வெளிவர வேண்டும்,நேற்று கண்ட நிகழ்ச்சியும் நல்லவைகள் என்று சொல்லப்பட்டதும் மட்டுமே காட்டப்பட்டது.

// அதிரையின் புகழை, பெருமையை ஆவணங்களால் மட்டுமே நிறுவுவோம்; ஆவணப் படங்கள் வேண்டாமே?! //

சரியாக சொன்னீர்கள் ஏற்றுக் கொள்ளக் கூடியதே உங்களின் கருத்து !

வேண்டாம் வரதட்சணை said...

வாருங்கள் கை கோர்ப்போம்.
வேரறுப்போம் கைக்கூலியை
இன்ஷா அல்லாஹ்

வேண்டாம் வரதட்சணை said...

வரதட்சணை பிரியர்களுக்கு செருப்படி கொடுத்தார் அந்நியன்

thuvilah said...

good

thuvilah said...

இப்ராஹிம் டாக்டரை மரந்துடிங்களே

வேண்டாம் வரதட்சணை said...

nice blog

MSAH said...

ஆவணப் படங்கள் பட்டிதொட்டியெங்கும் செல்லும் என்பதை மறந்து விடாதீர்கள்.
ஆதலால் ஆவணப் படங்களும் எடுங்கள். ஆவணங்களையும் பாதுகாத்து வாருங்கள்.

இப்படிக்கு,
அதிரையின் மேல் காதல் கொண்ட காயல்வாசி M.S. அப்துல் ஹமீது

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அதிரைப்பட்டினம் வரலாறு ஏதும் புதிய அத்தியாயம் தயாராகிறதா ?

Anonymous said...

Resources like the one you mentioned here will be very useful to me! I will post a link to this page on my blog. I am sure my visitors will find that very useful.

Anonymous said...

வரதட்ச்சனை வாங்க / கொடுக்க கூடாது என்பது அணைத்து முஸ்லிம்களுக்கும் தெரியும், இந்த பழக்கம் புகுந்தது இருந்தது அல்ல. பென்னிர்க்காண திருமண நன்கொடை (மகர்) எப்பொழுது நின்றது என்றால், பென்னிர்க்காண திருமண நன்கொடையை (மகர்) பற்றி கூறும் புத்தகத்தை (அல் குர்'ஆண்) படிக்க மறந்த காலத்தின் முதல் வரதட்ச்சனை அவர்களிடம் புகுந்து கொண்டது. இதை படித்து (அல் குர்'ஆண்) பின் பற்றினால் வரதட்ச்சனை புகுந்த எதிர் திசையை நோக்கி போகும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை, இன்ஷா அல்லாஹ். பின் புஹாரி.

Labels

 
TOP