Loading...
Monday 11 October 2010

அதிராம்பட்டினம் வந்த அதிவீரராம் பாண்டியன்! அதிரை ஹிதாயத்

அதிவீரராம் பாண்டியன் அதிராம்பட்டினத்தை ஆட்சி செய்யவுமில்லை; அதற்கு வாய்ப்பும் இல்லை என்பதை வரலாறுகள் நிரூபித்து வருகின்றன.

இந்நிலையில் அதிவீரராம் பாண்டியன் அதிராம்பட்டினம் வந்ததாக சொல்லப்படும்  நிகழ்ச்சியை பற்றி சில வரிகளில் ஒரு விமர்சனப் பார்வை!

"அருள்மிகு அபய வரதீஸ்வரர் திருக்கோயில்

சிவனதுநட்சத்திரமான திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களும், ராகு-கேது தோஷத்தினால் பாதிக்கப்பட்டவர்களும் வாழ்நாளில் அடிக்கடி வழிபட வேண்டிய தலம் தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் அபய வரதீஸ்வரர் திருக்கோயிலாகும். தன்னை நம்பியவருக்கு அபயம் தரும் அபய வரதீஸ்வரராக இத்தல இறைவன் விளங்குகிறார்.

தல வரலாறு : முன்னொரு காலத்தில் அசுரர்களால் துரத்தியடிக்கப்பட்ட தேவர்களும், முனிவர்களும் தங்களை பாதுகாத்துக்கொள்ள திருவாதிரை நட்சத்திர மண்டலத்தில் தஞ்சம் புகுந்தனர். ஏனென்றால் பிரதோஷ காலத்திலும், திருவாதிரை நாளிலும், சிவபெருமான் அபயம் தருபவராக உலாவரும் லோகங்களில் திருவாதிரை நட்சத்திர மண் டலமும் ஒன்று. எனவே இந்த மண்டலத்தில் நுழைந்திடவே அசுரர்கள் பயப்படுவர். எனவே திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருவாதிரை நாளில் இங்கு வழிபாடு செய்வது சிறந்தபலன் தரும் என்றும் கூறப்படுகிறது.  பைரவ மகரிஷி, ரைவத மகரிஷி ஆகிய இரு மகரிஷிகளும் தினமும் இத்தலத்தில் அருவமாக அபய வரதீஸ்வரரை வழிபாடு செய்வதாக கூறப்படுகிறது. ரைவத சக்தி என்பது சிவனது முக்கண்ணில் உறைகின்ற ஒருவித ஒளியாகும். இந்த சக்தியின் வடிவமாக ரைவத மகரிஷி திருவாதிரை ஆருத்ரா தரிசன நாளில் அவதரித்தவர்.இந்த முனிகள் இருவரும் திருவாதிரை நாளில் இங்கு வழிபாடு செய்வதாக கூறப்படுகிறது.

ஆதிரை லிங்கமாய் ஆமறை ஜோதியன்
ஆதிரை தானதில் அபயமென் றருளுவன்
ஆதிரை வதனழல் ஆகிடும் ஆதியில்
ஆதிரு ஆதிரை ஆலமர் ஆரணா!

என்ற திருவாதிரை கோயில் பற்றிய பரிபாஷைப்பாடலை, திருவாதிரை நட்சத்திரக்காரர்கள் அபயவரதீஸ்வரர் முன் நின்று பாடி வணங்கினால் சிவனின் திருவருளையும், ரைவத மகரிஷியின் அருளையும் பெறலாம்.

எம பயம் போக்கும் தலம்: தீராத நோயால் அவதிப்படுபவர்கள், எம பயம் உள்ளவர்கள், ஆயுள் விருத்தி வேண்டுபவர்கள் இங்கு வழிபாடு செய்கிறார்கள். ஆயுஷ் ஹோமமும், மிருத்தஞ்சய ஹோமமும் திருக்கடையூருக்கு அடுத்த படியாக இங்கு அதிக அளவில் செய்யப்படுகிறது. எந்த தோஷத்தினாலும் திருமணத்தில் தடை இருந்தாலும் இங்கு வழிபாடு செய்தால் பலன் நிச்சயம்.

திருவாதிரை நட்சத்திர தலம்: திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவனும், அரசனுமான அதிவீரராமபாண்டியன் இத்தல இறைவனை வழிபட்டு பல அரிய திருப்பணிகள் செய்துள்ளான். ஆரம்பகாலத்தில் இத்தலம் திருஆதிரைப்பட்டினமாக இருந்து,அதிவீரராமன் பட்டினமாகி, தற்போது அதிராம்பட்டினமாக திகழ்கிறது. இத்தல அம்மன் சுந்தர நாயகிதெற்கே கடலை பார்த்து அருள்பாலிப்பதால் கடல் பார்த்த நாயகி என்ற பெயரும் உண்டு. சம்பந்தர் பாடலில் இத்தலம் வைப்புத்தலமாக போற்றப்படுகிறது."(1)
என்று சொல்கிறார்கள்.

வந்திருக்கட்டும். அது அவர் நம்பிக்கை; இதில் நம் கருத்து ஒன்றுமில்லை!

இந்த நிகழ்வின் அல்லது தகவலின் படி சில கேள்விகள்:

"அதிவீரராம பாண்டியன்) புனர்வசு நட்சத்திரத்தில் பிறந்தவன்" என்பது வரலாறு. ஆனால், நாம் மேலே பார்த்த தகவல் படி "திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவனும்..." என்று சொல்கிறார்கள். ஒருவன் எப்படி இரு நட்சத்திரத்தில் பறப்பான்? அவர்களின் நம்பிக்கை படிதான் கேட்கிறோம்!
அப்படியே, திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவனாகவே வைத்துக்கொள்வோம்.

"தீராத நோயால் அவதிப்படுபவர்கள், எம பயம் உள்ளவர்கள், ஆயுள் விருத்தி வேண்டுபவர்கள் இங்கு வழிபாடு செய்கிறார்கள்." என்றும் சொல்கிறார்கள்.
அப்படியென்றால் இந்த மூன்று காரணங்களுக்காகவோ அல்லது ஒரு காரணங்களுக்காவோ அதிவீரராம பாண்டியன் வந்து பூசை செய்தான் என்று வைத்துக்கொள்வோம்.

தீராத நோயால் அவதிப்படுபவர்கள்,
எம(மரண) பயம் உள்ளவர்கள்,
(நீண்ட நாள் வாழவேண்டும் என்று)ஆயுள் விருத்தி வேண்டுபவர்கள்.
இந்த மூன்றும் அல்லது ஒன்றோ உள்ளவர்கள் போரில் ஈடுபடுவார்களா? பல நூறு மைல்களுக்கு அப்பால் உள்ள இடத்தை அதுவும் வலிமையான அரசை எதிர்த்து படைதிரட்டியிருப்பார்களா? உங்கள் பதிலுக்கே விட்டுவிடுகிறேன்.

மேலுள்ள தகவல் உண்மை என்று வைத்துக்கொண்டாலும் அதிவீரராம பாண்டியன் அதிராம்பட்டினத்திற்கு ஒரு பக்தனாகத்தான் வந்திருக்கிறான் அவ்வளவே!


"ஆரம்பகாலத்தில் இத்தலம் திருஆதிரைப்பட்டினமாக இருந்து,அதிவீரராமன் பட்டினமாகி, தற்போது அதிராம்பட்டினமாக திகழ்கிறது..." என்ற தக‌வலையும் சொல்கிறார்கள்.
கற்பனை சொவதற்கு ஒரு அளவுகோல் இல்லையா என்று கேட்கவிரும்புகிறோம்.

உசாதுணை தகவல்கள்:
(1)
http://psssrf.org.in/usfullastro/tamilastrobooks.aspx?id=6658

தினமலர்.கோயில்கள்

இந்துசம‌யம்

5 comments:

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும்." நச்"வாழ்த்துக்கள்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அப்படின்னா "அதிரை பட்டணம்" ன்னு மாத்திக்கோவோமா ! ஏன்னா "அதிரை"ங்கிற பேர் எல்லா வகையிலும் பயன்ப்டுத்தப் பட்டு வருகிறது நிகழ்வில்... இனிமேல் "அதிரைப்பட்டினம்"

Unknown said...

"அதிரைப்பட்டினம்" - நல்ல பரிந்துரை!

தாஜுதீன் (THAJUDEEN ) said...

"அதிரைப்பட்டினம்" - நல்ல பரிந்துரை!

Abdul Salam S said...

அதிரைப்பட்டினம்" - நல்ல பரிந்துரை!

Labels

 
TOP