Related Posts with Thumbnails

அதிரைவரலாறு தளத்திற்கு கட்டுரைகள் அனுப்ப:

adiraihistory@gmail.com

Tuesday, 16 November 2010

சன் டிவி நிஜத்தில் காயல்பட்டினம்!

காயல்பட்டினம் அதிரைப்பட்டினத்துடன் தொடர்புள்ள ஊர்.அந்த வகையில் அதிரைவரலாற்று வலைப்பூவில் இந்த காணோளியை இடம்பெற செய்துள்ளோம்.
சன் தொலைக்காட்சியின் முயற்ச்சிக்கு எமது வாழ்த்தும் நன்றியும்.

எஸ்.கே.காக்கா என்ற ஷாஹுல் ஹமீது காக்கா அவர்கள் உள்பட பலர் நுட்பமான முறையில் வர்ணனை செய்துள்ளனர்.

அதிரைப்பட்டினத்திற்கும் ஒரு ஆவனப்படம் எடுத்தால் நமது வரலாறு காணோளியாக மக்களிடம் இன்னும் போய் சேரும்!
அன்பு வாசகர்களே உங்கள் கருத்து என்ன?

Read more...

Saturday, 13 November 2010

மறக்க முடியாத மருத்துவர்கள்: அதிரை அஹ்மது

மருத்துவம், மருத்துவமனை பற்றிய கருத்தாய்வும் கருத்துக் கணிப்புகளும் நமதூரில் பேசப்படும் தருணமிது.  இந்நேரத்தில், நம்மூரின் பழமை பற்றியும் ஓர் ஆய்வு தேவைதானே?

கலந்தர் மரைக்காயர்:  (இவர்களைப்பற்றி ஏற்கனவே 'அதிரை வரலாறு' வலைப்பூவில் தனிக் கட்டுரை இடம்பெற்றுவிட்டது.  அதில் இடம்பெறாத சில தகவல்கள் மட்டும் இங்கே:)

கலந்தர் மரைக்காயர் இறந்த பிறகு, அவருடைய (மனைவி வழி) மூத்த மகன் சேகப்துல்லா காக்கா அவர்கள் தன்னால் இயன்ற, தனது அனுபவத்தின் மூலம் மருந்துக் கடை வைத்து, சில மருந்துகளைக் கொடுத்துவந்தார்.  கலந்தர் மரைக்காயரின் இளைய மகன் மனநிலை பாதிக்கப்பட்டவர்.  அவரும் சில நேரங்களில் 'தொப்பிக்குள் செந்தூரம் இருக்குது; தருகிறேன்' என்பார்.  மக்கள் பைத்தியத்திடம் எப்படி வாங்குவது என்று தயங்குவார்கள்.  அத்துடன் அந்தக் குடும்பத்தின் நாட்டு வைத்திய முறையும் முடிவுற்றது.

செந்தூரம் எனும்போது, சில தனித்தனி வீடுகளில் செந்தூரம் விற்பனையும்   நடந்ததை அறிவேன்.  அவற்றுள் 'செந்தூரக்கார வீடு' என்று பெயர் பெற்றது, இப்போதுள்ள எனது அண்டை வீடு.  'கூனா வீட்டு செந்தூரம்' என்பதும் நடுத்தெருப் பகுதியில் பெயர் பெற்ற ஒன்றாகும்.  அன்றைக்கு வந்ததோ, ஒரு சில நோய்கள்தாம்.  அவற்றுக்கெல்லாம் ஒரே மருந்து, சென்தூரம்தான். 

பெத்தையன்:  இவர் ஒரு நாட்டு வைத்தியர்.  இந்துவாக இருந்தாலும், நமதூர் முஸ்லிம் மக்களுடன், குறிப்பாக நமதூரின் சமூகத் தலைவர்களுடன் நல்ல உறவைக் கொண்டிருந்தவர்.  நாடி பிடித்து நோயைக் கண்டுபிடிப்பதில் வல்லவர்.  மடியில் ரெடியாகச் சில மருந்துகளை வைத்திருப்பார்.  சற்று முதிர்ந்த நோய்களாயிருந்தால், அடுத்த நாள் செய்துகொண்டு வருவதாகச் சொல்லிப் போவார்.  கழுவித் துவைத்துப் பெட்டி போட்டு மடிப்புக் கலையாத வெண்மையான உடையுடன், தோளில் அங்கவஸ்திரத்தொடு காணப்படும் அந்தக் கருமைத் தோற்றமுடைய வைத்தியர் பெத்தையன், காசில்லா ஏழைகளுக்கும் காசுள்ள பணக்காரர்களுக்கும் தன மருத்துவச் சேவையைப் பாகுபாடின்றிச் செய்து பயன் விளைவிப்பார்.

இவர் அதிரை முஸ்லிம்களுடன் இணக்கமாக இருந்ததன் பிரதிபலனோ என்னவோ, அல்லது இவரால் பயன் பெற்ற நல்லடியார் ஒருவரின் துஆவினாலோ  என்னவோ, அவருடைய மகன் இஸ்லாத்தைத் தழுவி, இன்று முஸ்லிமாக வாழ்ந்துவருகின்றார்.  இப்போது அவரும் நாட்டு வைத்தியத் தொழிலை மேற்கொண்டு, தன்னால் இயன்ற பணிகளைச் செய்து வருகின்றார்.

இக்ராம் டாக்டர்:  எனக்குத் தெரிந்தவரை, முதன்முதலாக அதிரைக்கு வந்த ஆங்கில மருத்துவர் இவர்தான்.  அக்காலத்தில், அதிரையில் இவரிடம் மட்டுமே 'அம்பாசிடர்' கார் இருந்தது.  இப்போது இருக்கும் 'மக்தூம் பள்ளி'யின் இடத்தில்  அன்று 'ரிஜிஸ்டர் அபீஸ்' இருந்தது.  அந்த வரிசையின் கடைசிப் பகுதியில் டாக்டரின் மருத்துவமனை இருந்தது.  இக்ராம் டாக்டர் திருச்சியைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.  உருது தாய்மொழி.  அதிரையில் குடும்பத்தோடு குடியேறி வாழ்ந்து வந்தார்.  மிகவும் கண்டிப்பான ஆள்.  ஆனால், 'கைராசிக்காரர்' என்று பெயரெடுத்தவர்.  அதிரையின் செல்வந்தர் வீடுகளுக்கும், அவரிடம் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவரும் முதிர் நோயாளிகளுக்கும் மட்டும், அழைப்பின் பேரில் காரில் வந்து சிகிச்சையளிப்பார்.  வீட்டு வருகைக்காகக் கூடுதல் கட்டணம் ரூபாய் ஐந்து சேர்த்துக் கொடுக்கப்படும்.  அவரிடம் கம்பவுண்டராகப் பணியாற்றிய அப்துர்ரஹ்மான் இப்போதும் உள்ளார், செக்கடி மேட்டில் ஒரு சிறிய கடை வைத்துக்கொண்டு.  டாக்டரும் அப்துர்ரகுமானும் திரும்பி வந்த பிறகுதான், மருத்துவமனை மீண்டும் இயங்கத் தொடங்கும்.  அதுவரை நோயாளிகள் பொறுமை காப்பார்கள்!  இந்த டாக்டரை விட்டால் வேறு டாக்டர் இல்லை என்ற நிலைக்காக அன்று; இவர் கைராசிக்காரர் என்பதால்!

நாங்கள் எங்கள் உயர்நிலைப் பள்ளி நாட்களில் நடுத்தெருவில் 'இக்பால் நூல் நிலையம்' என்றொரு நூலகம் நடத்திவந்தோம்.  அந்த நேரத்தில்தான் அல்லாமா இக்பால் அவர்களின் நூற்றாண்டு நிறைவு பெற்றிருந்தது.  இளைஞர்களான இல்லை, சிறுவர்களான எம் உள்ளங்களில் நமதூரில் அல்லாமா இக்பாலின் நூற்றாண்டு விழா நடத்தினால் என்ன? என்ற உதிப்பு!  களத்தில் இறங்கிவிட்டோம்!  இடம்: மரைக்காபள்ளி முக்கூட்டு முனை!  பெரிய பந்தல்!  பேச்சாளர்கள்:  டாக்டர் இக்ராம் (உர்து).  'இறையருட்கவிமணி', பேராசிரியர் கா. அப்துல் கபூர் M.A. (தமிழ்).  மாநாட்டுத் தலைவர்:  அ. இ. செ. முஹிதீன் B.A.  இன்னும் உள்ளூர் பேச்சாளர்களும் சொற்பொழிவாற்ற, மாநாடு மிகச் சிறப்பாக நடந்து முடிந்தது!

டாக்டர் நெடுங்காடி:  மருத்துவ வசதிகள் குறைவாயிருந்த அந்தக் காலத்தில், நமதூர் அரசு மருத்துவமனையில் பணியாற்ற வந்து சேர்ந்தார் டாக்டர் நெடுங்காடி.  இவருடைய பொதுநலச்  சேவையின் மூலம் அரசு மருத்துவமனை அக்காலத்தில் புகழ் பெற்றிருந்தது. ஆனால் மருத்துவக் கருவிகள் மற்றும் உபகரணங்கள் மிகக் குறைவு.  அவற்றை வைத்துக்கொண்டு, அவர் தரும் சிகிச்சைகள் அபாரமானவை.

நான் மிகச் சிறிய வயதுடையவனாக இருந்தபோது, என் தாயாருக்கு உள்ளங்கையில் ஒரு சிறிய கட்டி.  அதை டாக்டரிடம் காட்டியபோது, ஆபரேஷன் செய்தே ஆகவேண்டும் என்றார்.  இப்போது இருப்பதைப்போல், ஆபரேஷன் தியேட்டர் மற்றும் உபகரணங்கள் எதுவும் இல்லை.  ஒரு மரக் கட்டிலில் படுக்க வைத்துத் தம் பொறுப்பை நிறைவேற்றத் தொடங்கினார் டாக்டர்.  என் கண்கள் நீர் வடிக்க, என் தாயைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.  கத்தி வைத்தாரோ இல்லையோ, கத்தத் தொடங்கிவிட்டார்கள் என் தாய்.  "ஐயா!  உட்ருங்கோ!" என்று கத்தியபோது பிஞ்சுப் பருவத்தினன் என்னால் பார்த்துக்கொண்டிருக்க முடியுமா?  என்னைத் தடுத்துப் பிடித்து நிறுத்தத் தொடங்கிவிட்டார்கள் பக்கத்தில் நின்றவர்கள்.  அந்தக் காலத்தில் ஆபரேஷன் எல்லாம் தியேட்டரில் நடக்காது.  ஒரு விதமான rude treatmentதான்!  அப்படி இருந்தும், நோய்கள் குணமாகின!  டாக்டர் நெடுங்காடியும் கைராசிக்காரர்தான்.  அப்போதிருந்த dedication, kindness, concentration எல்லாம் மருத்துவர்களிடம் இப்போது குறைவு.   

ஜெர்மன் டாக்டர்:  இந்தப் பெயரில் ஒருவர் தன்னை டாக்டர் என்று கூறிக்கொண்டு நமதூர் தட்டாரத் தெருவில் இருந்த ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துக்கொண்டு, தன் 'தொழிலை' ஆரம்பித்தார்.  ஒரு நாள் திடீரென்று குழந்தையாக இருந்த என் மருமகளுக்கு நெஞ்சு வலி வந்துவிட்டது.  நானும் என் நண்பர் அப்துல் கபூரும் தூக்கிக்கொண்டு ஓடினோம், இந்த ஜெர்மன் டாக்டரிடம்.  எடுத்த எடுப்பில், அந்தப் பச்சிளங்குழந்தையின் நெஞ்சில் குத்தினாரே ஓர் ஊசி!  அதிர்ச்சியால் நாங்கள் உறைந்து போய்விட்டோம்!  குழந்தை அலறவே, அவளைத் தூக்கிகொண்டு வீடு வந்து சேர்ந்தோம்.  நடந்ததை வீட்டில் சொன்னபோது, வீட்டாரும் துடித்துப் போனார்கள்.  அல்லாஹ்வின் உதவியால் குழந்தைக்கு ஒன்றும் ஆகவில்லை!  பிறகு தெரியவந்தது, அவர் போலி டாக்டர் என்பது!  கண்வலி என்றால் கண்ணில் குத்தியிருப்பாரோ?

மற்றவை, பின்னூட்டக்காரர்கள் பார்த்துக்கொள்ளட்டும்.  


இந்த கட்டுரைக்கு அதிரைநிருபர் வலைப்பூவில் வந்த கருத்துரைகள். கட்டுரையில் விடுபட்டவர்களை நினைவேந்தி இருக்கிறார்கள். அதனை நன்றியோடு பதிவிடுகிறோம்.

அபுஇபுறாஹிம் சொன்னது…

    ஆஹா மற்றொரு களம் கிடைத்திருக்கிறது... பொருத்திருந்து பாருங்கள்..

    இன்றைய மருத்துவ மனையின் ஒரு விளம்பரம் !

    "இங்கே சிகிச்சைக்கு கூட்டிகிட்டு வாங்க... முடிந்ததும் தூக்கி கிட்டு போங்க" !

    சீரியஸா இருந்தீங்கன்னா நான் பொறுப்பல்ல...
    Wednesday, November 10, 2010 9:21:00 PM

sabeer சொன்னது…

    ஈஸிச் சேரில் அமிழ்ந்து, கட்டிய கைகளை பிடரியின் பின்னால் தக்க வைத்துக்கொண்டு, எவ்வளவு அழகாக அசை போடுகிறீர்கள் காக்கா!

    வலிக்காத ஊசியாய் சுகமாய் இருக்கிறது கேட்க. அதிரை வரலாற்றின் அதி முக்கிய பக்கங்களை செதுக்குவதுபோல் சேர்த்துத் தருவது உங்களால் மட்டுமே முடியும்.

    நீங்கள் குறிப்பிட்டவர்களில் இக்ரம் டாக்டரின் பெயர் மட்டும் கேட்ட ஞாபகம் இருக்கு.வரலாற்றில் இன்னும் பதியப்படாத பல பக்கங்கள் உங்களுக்காக காத்திருக்கிறது.

    தொடர்ந்து எழுத துஆ.
    Wednesday, November 10, 2010 10:55:00 PM

அபுஇபுறாஹிம் சொன்னது…

    டாக்டர் இபுறாஹிம் - அதிக நாள் இருந்த இடம் புதுப்பள்ளிக்கு எதிரில்தான் பனிமனை, இவரைக் கண்டாலே எனக்கு ரோஸ் கலரில் இருக்கும் சர்பத் போன்ற திரவம் அடங்கிய பாட்டில்தான் ஞாபகத்திற்கு வரும். ஆஸ்பத்திரி வாடைன்னா அங்கேதான் தெரியும் அப்படி ஒரு விதமான மருந்து வாடை இருக்கும் அவரின் மருத்துவ மனையில், மாத்திரைகள் தினத் தந்தி பேப்பரில் மடித்து தரப்படும்.
    Thursday, November 11, 2010 12:13:00 AM

crown சொன்னது…

    அஸ்ஸலாமு அலைக்கும்.சாச்சாவின் மற்றுமொரு கலக்கல் நினைவுப்பதிவுகள்.சாச்சாவுக்கு எழுத்துக்காக மருத்துவப்பட்டம் கொடுக்கலாம். நான் அழைக்கப்போவது டாக்டர் அஹமது சாச்சா.அல்ஹம்துலில்லாஹ்.இக்ராம் டாக்கரைப்பற்றிய அதிக "டாக்"(TALK) கேள்விபட்ட்டிருக்கிறேன். சாச்சா சொன்ன சில ராசி கார டாக்டர் நான் சொல்லப்போவது நிசமாவே கைராசிக்காரர்.என் பெரியம்மாவின் உம்மாவுக்குச்சொந்தம்.எப்படி ராசிக்காரர்ன்னா சில நேரம் சீரியஸாக இருக்கும் சிலருக்கு இவர் வந்து வைத்தியம் பார்த்தவுடன் அடங்கிவிடும்.(மொவ்தாகிவிடுவார்கள்)அப்படிதான் என் பெரியம்மாவின் உம்மாவுக்கு உடம்பு சரியிலை என் ராத்த சொன்னாங்க உடனே அந்த" "கூட்டிகிட்டு வா. நான் என் பெரியப்ப மகனுடன் சேர்ந்து அவர கூட்டிகிட்டு வர கிளம்பினேன். அப்போது நான் சொன்னேன் எப்படியும் உம்மாமா இறக்கப்போகுது நாம அடக்கத்துக்குள்ள வேலைய பாக்கனுன்னு.ஏன்டா அப்படிய் சொல்ரே?ன்னு பெரியப்ப மகன் கேட்டான். நான் சொன்னேன் வெற என்ன இந்த டாக்கரை கூட்டிகிட்டு வரச்சொல்லிடாங்களே! அதுபோல் கூட்டி வந்தோம் .வந்து கையைபிடித்தார். சில நிமிடங்களிலேயே அவர்கள் இறந்து போய் விட்டார்கள்.இதுபோல் பலமுறை நடந்துள்ளது.இது நடந்த சம்பவங்கள். நகைச்சுவைக்காக எழுதபடவில்லை.
    Thursday, November 11, 2010 1:10:00 AM

crown சொன்னது…

    அஸ்ஸலாமு அலைக்கும்.அதனாலேயே எங்கவீட்ல யாருக்காவது உடம்பு சரியில்லைன்னா. நான் துஆ கேட்பது இப்படித்தான் யா அல்லாஹ் அந்த டாக்டரின் வைத்தியத்திலிருந்து எங்களை காப்பாத்துன்னு.என் சகோகதரர்கள்,என் தாய் என்னை ஏசுவார்கள்.அடிக்க வருவார்கள்.ஆனால் நான் மறைக்காமல் சொல்லிவிடுவேன் என் குடும்பம் முக்கியம் ரிஸ்க் எடுக்க அனுமதிக்க மாட்டேன்.காரணம் ராசி என்பதை விட அவர் அப்டேட் இருப்பதில்லை பழய வைத்திய முறைதான்.
    Thursday, November 11, 2010 1:17:00 AM

அபுஇபுறாஹிம் சொன்னது…

    எழும்பு முறிந்தால் காட்டுவோமே (மாவு)டாக்டர்,அவர் எடுப்பாரே பெண்டு ஆஆஆ.... அந்த வலியிருக்கே!, எங்களுக்குல தெரியும்... :(

    "எப்படி ஏற்பட்டுச்சுன்னு கேட்பார்" அந்த மருத்துவர் - விளையாடும் போது கீழே விழுத்துட்டேன்னு சொல்லி கிட்டு இருக்கும் போதே இப்படியா மடங்குச்சுன்னு பெண்டு எடுப்பாறே இன்னும் வலிக்குது, , ஆனால் no side effect so are..
    Thursday, November 11, 2010 9:48:00 AM

'ஒருவனின்' அடிமை சொன்னது…

    பிறகு தெரியவந்தது, அவர் போலி டாக்டர் என்பது! கண்வலி என்றால் கண்ணில் குத்தியிருப்பாரோ?
    அடப்பாவி?அப்போதே இப்படி போலி டாக்டர்கள் உருவாகியாச்சா?
    Thursday, November 11, 2010 11:27:00 AM

அன்புடன் மலிக்கா சொன்னது…

    மருத்துவர்களை மரியாதையாக உயிர்காக்க உதவும் உத்தமர்களாக நினைக்கிறோம். ஆனால் சிலநேரம் அவர்கள் பிறர் மானத்தையே
    சூறையாடும் சுகபோகர்களாக திரிகிறார்கள் இவர்களைபோல்..

    மரக்கட்டை மனிதர்களால் மானத்திற்கு ஆபத்து.
    http://kalaisaral.blogspot.com/2010/11/blog-post_10.html..
     Thursday, November 11, 2010 12:24:00 PM

அபுஇபுறாஹிம் சொன்னது…

    வாங்க ஒருவனின் அடிமை... ! வரவேற்பது என் வழக்கம் ! அடிக்கடி வருவது உங்கள் வழக்கம்(ஆக்கிட வேண்டியதுதானே) !
    Thursday, November 11, 2010 3:32:00 PM

jaleelsa சொன்னது…

    இன்னும் இக்ராம் டாக்டரைப்பற்றி மரக்காத சில..
    நமதூர் பெண்கள்,
    டாக்டர் : என்ன பன்னுது?
    நோயாளி: நெஞ்சுக்குள்ளே என்னமோ பன்னது
    டாக்டர் : அப்பரம் என்ன பன்னது?
    நோயாளி: ஒரே படபடப்பா வருது
    டாக்டர் : அப்பரம்!!?
    நோயாளி: ஒரே ஹொதரத்தா வருது
    டாக்டர் விசயத்தை புரிந்துகொண்டு மாத்திரையை
    மடித்து கொடுத்து விடுவார்.
    Thursday, November 11, 2010 6:19:00 PM

Shahulhameed சொன்னது…

    டாக்டர் ராஜு அதிரை அரசு மருத்துவ மனைக்கு வந்த புதிதில் கடற்கரை தெருவில் கிணறு சுத்தாம் செய்ய இறங்கிய மூன்று பேர் விஷ வாயு தாக்கி இறந்து போனார்கள் அவர்களின் சடலங்களை புதிதாக வந்த டாக்டர் ராஜு தான் பிரோத பரிசோதனை செய்து முடித்தார் அதன் பின் அவருக்கு ஜுரம் வந்து ஒரு வாரம் மெடிகல் லீவில் போய்விட்டார்.
    Thursday, November 11, 2010 6:19:00 PM

அபுஇபுறாஹிம் சொன்னது…

    டாக்டர்களிடம் அழைத்துச் செல்லும் குதிரை வண்டிக்காரர்கள் இருக்கிறார்களே அவர்களுக்கும் தெரியும் என்ன வியாதிக்கும் எந்த டாக்டர் கைராசி அல்லது சீக்கிரம் குணம் அடையும் என் காது பட நிறைய கேட்டிருக்கேன், ஒரு குறிப்பிட்ட குதிரை வண்டிக்காரர் அவருக்கு அடை மொழியும் உண்டு (அந்தப் பெயரை தவிர்க்கிறேன் இங்கே) எந்தத் தெருவுக்குச் சென்றாலும் டாக்டரிடம் போ என்றுதான் சொல்லுவார் அவர் தானாகச் சென்று அந்தக் குறிப்பிட்ட டாக்டரின் மருத்துமனை வாசலில் நிற்கும் விதம் ஆச்சர்யத்தை கொடுக்கும், இதனை மற்ற சகோதரர்கள் யாரும் கண்டோ அல்லது கேள்விபட்டோ இருக்கலாம் !
    Thursday, November 11, 2010 7:54:00 PM

ZAKIR HUSSAIN சொன்னது…

    சகோதரர் அதிரை அஹ்மதுவின் மலரும் நினைவுகள் மற்றவர்களுக்கும் ஓர் மீள்பார்வை. இக்ராம் டாக்டர் Black & whiteல் லேசாக தெரிகிறார். மற்ற மருத்துவர்கள் நம் காலத்துக்கு முன் என நினைக்கிறேன்.
    Thursday, November 11, 2010 9:28:00 PM

Shahulhameed சொன்னது…

    அபுஇபுறாஹிம் சொன்னது…
    ஒரு குறிப்பிட்ட குதிரை வண்டிக்காரர் அவருக்கு அடை மொழியும் உண்டு (அந்தப் பெயரை தவிர்க்கிறேன் இங்கே) எந்தத் தெருவுக்குச் சென்றாலும் டாக்டரிடம் போ என்றுதான் சொல்லுவார் அவர் தானாகச் சென்று அந்தக் குறிப்பிட்ட டாக்டரின் மருத்துமனை வாசலில் நிற்கும்


    அது அவரின் திறமையா அல்லது குதிரையீன் திறமையா என்பது எனக்கு இதுவரை "வெளங்கவில்லை"
    Thursday, November 11, 2010 11:28:00 PM

தாஜுதீன் சொன்னது…

    அதிரை வரலாற்றில் மறக்க முடியாதவர்களை மருத்துவர்களை ஞாபகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி.

    ஒரு காலத்தில் தேள் கொட்டினால் மனிதன் பிழைப்பது என்பது அறிதாக இருந்தது. அதுவும் ஒரு குழந்தைக்கு கொட்டினால்...

    டாக்டர் இபுறாஹிம் அவர்கள் என் வாழ்வில் மறக்க முடியாதவர்கள்.

    30 வருடங்களுக்கு முன்பு எனக்கு ஒன்றரை வயது இருக்கும் போது என்னை "தேள்" கொட்டிவிட்டது, உடல் ஊதா நிறத்திற்கு மாறிவிட்டது, விட்டில் அனைவரும் அதிர்ச்சி பயத்தில் இருந்த அவ்வேலையில், என் அன்பு பெரியப்பா அவர்கள் தன் தோளில் என்னை தூக்கிச் சென்று இபுறாஹிம் டாக்டரிடம் சென்றார்கள். தைரியசாலியான என் பெரியப்பாவும் என் உடல் நிலையை பார்த்து நம்பிக்கை இழந்துவிட்டார்களாம். ஒன்றரை வயது குழைந்தையான எனக்கு தன் treatmentயை முறையாக செய்தார்கள் டாக்டர் இபுறாஹிம், அல்லாஹ்வின் உதவியால் நான் அன்றே குணம் அடைந்தேன். அந்த மனுசனின் நம்பிக்கையான மருத்துவ சேவையை இன்றும் என் பெற்றோரும், என் சகோதரரும், வீட்டில் உள்ளவர்களும் ஞாபகப்படுத்துவார்கள். இது போன்ற நல்லவர்களுக்காக என்றும் நம் துஆ செய்யவேண்டும்.

    அல்லாஹ் போதுமானவன்.
    Friday, November 12, 2010 3:29:00 PM

Read more...

Thursday, 11 November 2010

அதிரை வரலாற்றில் நான் கண்ட நகைச்சுவைக்குரியவர்கள்: அதிரை அஹ்மது

சீரியசான தகவல்கள் பரிமாற்றம் செய்துகொண்ட பின்னர், கொஞ்சம் ரிலாக்ஸாக இருப்பதற்கு, நகைச்சுவையின் பக்கம் திரும்பினால் நன்றாயிருக்கும்தானே? அதனால்தான் இச்சிறிய தொகுப்பு:

1. என் இளமைக் காலம் அது. எங்கிருந்தோ 'தெட்டித் தெறிச்சு' அதிரைக்கு வந்து சேர்ந்தது, ஒரு வினோதமான 'ஜென்மம்'. அதன் பெயர் 'அந்தோனி' என்று பின்னர் தெரியவந்தது. வீடுகளில் - குறிப்பாக ஆலடித்தெரு - கொடுக்கும் 'மிச்சம் மீதி'களை வாங்கித் தன் அபாரப் பசியைத் தீர்த்துக்கொள்ளும். அதே வேளை, அப்பகுதியின் வீட்டார் சொல்லும் வேலைகளை 'மாட்டேன்' என்னாமல் செய்யும் குணம். "அந்தோனி ஒரு குடம் தண்ணியள்ளிக் கொண்டுவா" என்று குடத்தைக் கொடுத்து அனுப்பினால், அவ்வளவுதான். அருகிலிருக்கும் கிணற்றிலிருந்து அள்ளிக்கொண்டு வர அரைமணி நேரமாவது ஆகும். என்ன செய்வான் தெரியுமா? மூன்று வாளியால் நிரப்பப்பட வேண்டிய குடத்தில் முப்பது வாளித் தண்ணீர் இரைப்பான் அந்தோனி! "அந்தோனி, போதும், போதும்" என்றால் கேட்காமல், "உம்" என்ற பதில்தான் அந்தோனியிடமிருந்து வரும்.

சில நேரங்களில் சிறுவர்களின் கல்லடிக்கும் ஆளாவான், அந்தோனி. கெட்ட வார்த்தை  கூறித் துரத்துவான். ஒருமுறை பையன் ஒருவன் (அவர் இப்போது பேரன் பெயர்த்தி எடுத்தவர்) அந்தோனியிடம் மாட்டிக்கொண்டான். அவன், "அந்தோனிக் காக்கா! அடிக்காதீங்கோ! உட்டுருங்கோ!" என்று கெஞ்சியதைக் காணப் பரிதாபமாகவும் இருந்தது; சிரிப்பும் வந்தது.

2. எங்கள் உறவினரிடம் 'ராமலிங்கம்' என்பவர் வேலைக்கு வந்து சேர்ந்தார். அவரும் ஓர் அரை. தோட்டத்திற்கு 12 மணிக்குச் சாப்பாடு கொடுத்தனுப்பினால், பிள்ளைமார் தெருவிலிருந்த தோட்டத்திற்குப் போய்ச் சேர 2 மணியாகும். காரணம், சற்று நேரம் முன்னோக்கி நடப்பான்; பிறகு, அதே வழியில் பின்னோக்கித் திரும்பி வருவான். தானாகப் பேசுவான்; தண்ணீரில் தூங்குவான்!

3. என் பள்ளித் தோழன் அஹ்மது ஹாஜா. பள்ளி வாழ்க்கை முறிந்துபோன பின்னர், அவன் கவிதைகள் எழுதத் தொடங்கிவிட்டான். பேப்பர்களில் அல்ல; வீட்டுச் சுவர்களில்! "அஹ்மது ஹாஜா அதிரைக்கு ராஜா" என்று இருவரிக் கவிதை தொடங்கும். என்னைக் காணும்போதெல்லாம், 'அஹ்மது' என்று என்னைக் காட்டுவான். பின்னர் தன்னைக் காட்டி, 'ஹாஜா' என்று கூறி, அதையே இரண்டு மூன்று முறை திருப்பிக் கூறுவான். அவனது இருவரிக் கவிதைகளுள் சில:

"தாய் தாலாட்டும்; நாய் வாலாட்டும்", "ஒருவனுக்கு ஒருத்திதான் மனைவி; கொறவனுக்குக் கொறத்திதான் மனைவி", "டெய்லி குளிக்கணும்; கைலி தொவைக்கணும்", "செந்தளையில் பொண்ணு; எந்தலையில் ஒண்ணு". (அதாவது, அவனுடைய மனைவி, செந்தலைப் பட்டினம் என்ற ஊர்ப் பெண்) அவனுடைய சுவர்க் கவிதைகளை நினைவுகூர்ந்தால், இன்றுகூட எனக்குச் சிரிப்பு வரும்.

4. எனது உயர்நிலைப் பள்ளி நாட்களில், முதிர்ந்த ஆசிரியர் ஒருவர் வந்து சேர்ந்தார். அவருடைய மூத்த வயதைக் கருதி, மாணவர்கள் அவரை, "அப்பா வாத்தியார்" என்று அழைப்பார்கள்; அவருடைய காதில் விழுந்தால், வருமே கோபம்! அதனால், சில சுட்டிப் பையன்கள், அவரை முன்னால் விட்டுப் பின்னால் இருந்துகொண்டு, "அப்பா!" என்பார்கள். திரும்பிப் பார்த்து, "எவண்டா அது கழிசடை! அபிஷ்த்து!" என்று கூறிக் காறித் துப்புவார்.

அவருக்குச் சின்ன வயது மகன் ஒருவன் இருந்தான். அவன் ஒன்பதாம் வகுப்பில் படித்துக்கொண்டு இருந்தான். ஒரு நாள், அவனைச் சக மாணவர்கள் கிண்டல் பண்ணினர். அது அந்த 'அப்பா' வாத்தியாரின் சோஷியல் வகுப்பு. தன்னைக் கிண்டல் பண்ணியவனைக் காட்டிக் கொடுப்பதற்காக எழுந்து நின்றான் பையன். 'சார்' என்று சொல்லிப் புகார் செய்வதற்கு பதிலாக, அவன் வாயிலிருந்து வந்தது: "அப்பா! இவன் என்னைக் கிண்டல் பன்றான்!" வகுப்பில் மாணவர்கள் 'கொள்'ளென்று சிரித்துவிட்டனர். அப்பா வாத்தியாருக்குக் கோபம் வந்துவிட்டது, அவர் மகன்மீது! அவன் தன் மகன் என்பதை மறந்தார். "என்னடா நீனும் 'அப்பா'னு கிண்டல் பண்ட்றா?" என்றாரே, பார்க்கலாம்; வகுப்பு மாணவர்களின் சிரிப்பு கூடியதே தவிர, குறையவில்லை!

பெருமைக்குரிய பின்னூட்டக்காரர்களே! உங்களின் நகைச்சுவை வரிகளுக்கு வழி விட்டு, இப்போதைக்கு நகர்ந்துகொள்கிறேன். ஜமாய்ங்க!

- அதிரை அஹ்மது adiraiahmad@gmail.com
 
இந்த கட்டுரைக்கு அதிரைநிருபர் வலைப்பூவில் வந்த கருத்துரைகள். கட்டுரையில் விடுபட்டவர்களை நினைவேந்தி இருக்கிறார்கள். அதனை நன்றியோடு பதிவிடுகிறோம்.

அபுஇபுறாஹிம் சொன்னது…
அசத்தல் ஆக்கம் ! அதிரைப்பட்டினத்தின் மைந்தர்களில் என்றுமே நக்கலடித்து விக்கல் வரவைக்கும் நகைச்சுவை நாயகர்கள் ஏராளம்.. வருவார்கள் வரிசையில் காத்திருப்போமே !
Tuesday, November 02, 2010 10:40:00 AM

அபுஇபுறாஹிம் சொன்னது…
வீட்டிலிருக்கும் அழுக்குத் துணிகள் கழுவித்தர ஒரு குறிப்பிட்ட ஏரியாவிலிருந்து ஒரு பெண் வருவார் அவரிடம் கொடுத்து கழுவிய டிரஸ்ஸைப் போட்டுக் கொண்டு ஸ்கூலுக்கு அவரிருக்கும் வழி தாண்டிச் செல்லும்போது வழியிலே அந்தப் பெண் கண்டுவிட்டால் தானாக பேசுவாரோ அல்லது சாடையாக சொல்வாரான்னு தெரியாது..
"இனிமே அடிச்சுதான் துவைக்கனும்"னு ஏன் இப்படிச் சொன்னார் கேட்டா சட்டையில இருக்கிற அழுக்கைச் சொன்னேன் சொல்லிடுவார் !!
Tuesday, November 02, 2010 10:46:00 AM

Shahulhameed சொன்னது…
கொறவனுக்குக் கொறத்திதான் மனைவி",அரக்கனுக்கு அரக்கிதான் "மனைவி",
Tuesday, November 02, 2010 3:57:00 PM

அபுஇபுறாஹிம் சொன்னது…
சாஹுல் காக்கா ஒரு கடி(ச்சுக்குவா) "ஆணுக்கு பெண் தான் மனைவியாமே" ?
Tuesday, November 02, 2010 4:02:00 PM

Shahulhameed சொன்னது…
அபுஇபுறாஹிம் சொன்னது…சாஹுல் காக்கா ஒரு கடி(ச்சுக்குவா) "ஆணுக்கு பெண் தான் மனைவியாமே" ?
உண்மையில் அதையும் எழுத தான் இருந்தேன் ஏனோ விட்டுவிட்டேன்
Tuesday, November 02, 2010 4:26:00 PM


அதிரைpost சொன்னது…
அந்தோனி' பற்றி ஏற்கனவே வீட்டில் கேள்விப்பட்டுள்ளேன்.
வீட்டில் சோறு தீத்தும் போது கூட 'அந்தோனி'என்று சொல்லித் தான் தீத்துவார்கள்.(அந்தோனி சாக்கு மஸ்தான் வர்ரான்; புள்ளைய புடிச்சிக்கிட்டு போப்போரான்)
அந்தோனி என்றால் அவ்வளவு பயம்.அந்தோனி இறந்து பல காலத்திற்கு பிறகும் அவருக்கு பயந்துள்ளது நினைத்தால்
சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்குது...
சாச்சாவின் நியாபக சக்தி...அல்ஹம்துலில்லாஹ்.நம்முடன் மூன்று வருடங்களுக்கு ஒன்னா கிளாஸ்ல படிச்ச 5பேரின் பேர் சொல்ல சொன்னா.....முடியல....
Tuesday, November 02, 2010 5:24:00 PM

அபுஇபுறாஹிம் சொன்னது…
/// நம்முடன் மூன்று வருடங்களுக்கு ஒன்னா கிளாஸ்ல படிச்ச 5பேரின் பேர் சொல்ல சொன்னா.....முடியல... ///
உண்மைதான்... ஆனாலும் கொஞ்சம் ஞாபகம் இருக்கு சொல்லவா with பட்டப் பெயருடன் :)
Tuesday, November 02, 2010 5:42:00 PM

Yasir சொன்னது…
அகமது காக்காவின் மற்றுமோரு கலக்கல் ஆக்கம்....வாத்தியார் மேட்டர் சூப்பர்..சாகுல் காக்கா நம்ம தெரு ஓடாவி (நடமாடும் சுமைதாங்கி ) / நெய்னா (கண்ணியத்திற்குரிய தூண்டிமுள் ஆலிம்சா சொந்தகாரர்) /எருமைமாடு / கோழிமாப்ள பற்றி கொஞ்சம் பின்னூட்டம் எழுதுங்களேன்
Tuesday, November 02, 2010 5:44:00 PM

ZAKIR HUSSAIN சொன்னது…
இது மாதிரி ஆட்கள் ஒவ்வொரு தெருவிலும் இருப்பார்கள். கடற்கரைத்தெரு இயற்கையாகவே ரிசோர்ட் மாதிரி இருப்பதால் [ அமைதிக்கு ரயிலடி / காற்றுக்கு கஸ்டம்ஸ் / சாப்பாடு .டீ என் வாங்கித்தர துபாய் / சவூதியிலிருந்து வந்த ஆட்கள் [ முன்பு மலேசியாவிலிருந்து] வெட்டிகதை பேச தர்கா...காலையில் புளியமரம், குளிக்க வெட்டிக்குளம் ] இப்படி பல வசதிகளும் இருப்பதால் சமயத்தில் வெளியூரிலிருந்து கூட ஆட்கள் வந்து சேர்ந்து நிரந்தரம் ஆகிவிடுவார்கள்.

இது மாதிரி ஆட்களை அடையாளம் காண ஒரு வழியிருக்கிறது ..லுஹர் தொழுகையில் துஆ வில் சத்தமாக 'ஆமீன்' சொல்வார்கள் [அன்றைக்கு நிச்சயம் யார் வீட்டிலாவது கல்யாண விருந்து இருக்கவேண்டும்]
Tuesday, November 02, 2010 6:54:00 PM

sabeer சொன்னது…
அஹமது காக்கா,அழகாக எழுதப்பட்டிருக்கும் இந்த ஆக்கம், துவக்கம் முதல் முடிவு வரை மெல்லிய நகைச்சுவை இழையோட துள்ளிச் செல்கிறது. இன்னும் நிறைய எழுத இறைவன் உங்களுக்கு அருள் புரியட்டும்.
Tuesday, November 02, 2010 11:01:00 PM

அதிரை அஹ்மது சொன்னது…
"ஆமீன்" சொல்கிறேன் தம்பி சபீர். உங்கள் துஆவுக்கு மிக்க நன்றி.
Wednesday, November 03, 2010 1:08:00 AM

Rafia சொன்னது…
சாச்சா அசலாமு அலைக்கும்.
"பெருமைக்குரிய பின்னோட்டக் காரர்களே" என தாங்கள் எழுதியிருந்ததால் பெருமையுடன் எழுதுகிறென்....(எழுத்துப்பிழைக்கு மன்னிக்கவும்)
அப்பா சாரப்பத்தி எழுதி-அந்தோனியைசொல்லி எஙகளுக்கு "மலரும் நினைவுகள்" தந்து விட்டீர்கள். பன்னா 'என்கின்ற ஊரைப் பற்றி சார்
கேட்க எமது பக்கத்து சீட் காரர் மேதாவித்தனமாக பண்ணா என்றால் "மீனு " என்று சொல்ல சைவ சமயத்தவரான அவருக்கு கோபம் கொப்பளிக்க கற்றுறை நோட்டு கட்டி வந்த காத்தாலே வாங்கு - வாங்குன்னு விளாசினார். அந்த மாணவர் என் மாமா வுக்கும் கிளாஸ் மேட -எனக்கும்.(பெயிலாகி பெயிலாகி ) ஒரு வேலை உங்களுக்கும் இருக்கலாம்!
Wednesday, November 03, 2010 2:47:00 AM

அதிரைpost சொன்னது…
/// நம்முடன் மூன்று வருடங்களுக்கு ஒன்னா கிளாஸ்ல படிச்ச 5பேரின் பேர் சொல்ல சொன்னா.....முடியல... ///
உண்மைதான்... ஆனாலும் கொஞ்சம் ஞாபகம் இருக்கு சொல்லவா with பட்டப் பெயருடன் :) //
அதுல காக்காவுமா...? தூண்டிவிட்டுட்டான் என்று என்மேல கோபப்படபோரஹ..
Wednesday, November 03, 2010 4:15:00 AM

அதிரைpost சொன்னது…
sabeer சொன்னது…
அஹமது காக்கா,அழகாக எழுதப்பட்டிருக்கும் இந்த ஆக்கம், துவக்கம் முதல் முடிவு வரை மெல்லிய நகைச்சுவை இழையோட துள்ளிச் செல்கிறது. இன்னும் நிறைய எழுத இறைவன் உங்களுக்கு அருள் புரியட்டும்.//
சபீர் காக்கா உங்களோட நானும் சேர்ந்து தூஆ கேட்கிறேன்.
Wednesday, November 03, 2010 4:18:00 AM

crown சொன்னது…
அஸ்ஸலாமு அலைக்கும்.சாச்சா வழக்கம் போல் வித்தியாசமானவர்களைப்பற்றிய வித்தியாசமான் ஆக்கம்.ஆனால், நான் தலைப்பை பார்த்ததும் நினைத்தேன். நம்ம ஊரில் உள்ள விகடகவிகளைப் பற்றி யேழுதி,சரவெடி(சிரிப்பு வெடி)எதிர்பார்த்தேன். ஆனால் இது ஊசிவெடிதான் .தயவு செய்து சரவெடி ஒன்னு தாருங்கள்.
Wednesday, November 03, 2010 5:29:00 AM

crown சொன்னது…
அஸ்ஸலாமு அலைக்கும். நான் காதர்மொகைதீன் பள்ளியிலே படித்துக்கொண்டிருக்கும் போது ஆண்டுவிழாவிற்கு அபூர்வசகோதர்கள் படத்துக்கு கமல்ஹாசன் போட்ட குள்ளன் அப்பு வேடம் போட்டு நடிக்க ரிகல்சல் நடந்து கொண்டிருந்தது.எல்லாம் செட் ஆகிவிட்டது.ஆனால் சூ மட்டும் சரியான அளவில் கிடைக்கலே.சிறிய அளவில் மேலும்கொஞ்சம் அகலாமா எந்த கடையில் கிடைக்கும்ன்னு பேசிகொண்டிருக்கும் போது நண்பன் சொன்னான்,கடைத்தெருவில் அரிசிக்கடை வச்சிருக்கிற மொம்மதுல்லா காக்காட்ட கேட்டுப்பாக்கலாமான்னு!!!! ஒரே சிரிப்பலைதான் போங்க.இப்படி ஏதாவது சம்பவம் மற்றவர்கள் பகிர்ந்து கொள்ளலாமே???
Wednesday, November 03, 2010 5:40:00 AM

அபுஇபுறாஹிம் சொன்னது…
என் சிறு வயதில் என்னோட அப்பா அவர்களோடு செல்லும் போது அவர்களின் கைபிடித்து நடப்பேன் அன்று அவர்களின் அன்று அவர்க்ளின் நண்பரோடு வந்து கொண்டிருந்ததால் அவர்களின் பின்னாலேயே நானும் நடந்து சென்று கொண்டிருந்தேன்.

இங்கே கிரவ்ன் சொன்ன அதே அரிசிகடை காக்கா அவர்கள் என் அப்பாவைப் பார்த்து "என்ன மரைக்கா எப்போது துரும்பு ஒட்டிகிட்டு வரும் இன்னைக்கு துண்டா வருதேன்னு" கேட்க அதுக்கு..

என் அப்பா அவர்களின் பதில் "யார்ராப்பா அது ! என் பேரன் துரும்புன்னு எங்களுக்கு கரும்புடா"ன்னு சொன்னதும் அதுக்கு அரிசி கடைக் காக்கா "ஆஹா நீங்களுமா கட்சி ஆரம்பிக்க போறியன்னு" டைமிங் கடி வைத்தார் வாய் விட்டுச் சிரித்தார்கள் அந்தச் சூழலில் இருந்தவர்கள்,
Wednesday, November 03, 2010 7:18:00 AM

crown சொன்னது…
அபுஇபுறாஹிம் சொன்னது…
என் பேரன் துரும்புன்னு எங்களுக்கு கரும்புடா"
----------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்.இதுக்குப்பேர்தான் குறும்பு!!!!
Wednesday, November 03, 2010 7:55:00 AM

jalal சொன்னது…
சகோ.அஹமது,
அஸ்ஸாலாமு அலைக்கும் (வரஹ்..,)
தாங்கள் எழுதியவிதம், அதன் நடை முதலிருந்து கடைசி வரை உண்மையில் அருமை, அதை படிக்கும்போதே !
    எப்படியிருந்தது என்றால் பெரியவர்கள் சிறுவர்களை அழைத்து அருகில் வைத்துக்கொண்டு கதை சொல்வார்களே அப்படி ஒரு அலாதி இன்பம் (அதில் கருத்தும் உண்டு, நகைச்சுவையும் உண்டு) உங்களது படைப்பு மேலும் மேலும் தொடர துஆ செய்கின்றேன் ஆமீன்.
Wednesday, November 03, 2010 9:00:00 AM

jalal சொன்னது…
சகோ.RAFIA
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..,)
இது யாரு ஜித்தா காரவங்களா ! (ஆமா என்றால் இது உங்களுக்குதான்)
எழுதுங்க எழுதுங்க யாத்திராவைப்பற்றி ?
யாருக்கு புரியுதோ இல்லையோ உங்களுக்குமா!
ஒன்னுவிடாம எல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லாத்தையும் எழுதுங்கமா.
Wednesday, November 03, 2010 9:23:00 AM

அபுஇபுறாஹிம் சொன்னது…
///jalal சொன்னது…
சகோ.RAFIA
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..,) //
ஜலால் காக்கா: கம்பார்ட்மெண்ட் மாறிட்டியலோ ! அதான் யாத்திரா மேட்டரு இங்கே வருது ! :) smile please !
Wednesday, November 03, 2010 9:29:00 AM

sabeer சொன்னது…
//கம்பார்ட்மெண்ட் மாறிட்டியலோ !//
இந்த ஊமைக்குசும்புக்குத்தான் கவிதை கம்பார்ட்மென்ட்ல உதை வாங்கினீங்க (அதுசரி அந்த "புத்துல பாம்பு மேட்டர்ல தப்பிச்சாச்சா?)
TTER நீங்கதானே என் மச்சான் புதுசு. இங்கேர்ந்து இறக்கி சகோ ரஃபிய கம்பார்ட்மென்ட்ல ஏத்திவிட்டா குறைஞ்சா போய்டுவீங்க. (அ.அ.காக்கா மன்னிக்கனும் உங்க ஏரியாவுல தொல்லை தருவதற்கு)
Wednesday, November 03, 2010 10:55:00 AM

crown சொன்னது…
sabeer சொன்னது…
//கம்பார்ட்மெண்ட் மாறிட்டியலோ !//
இந்த ஊமைக்குசும்புக்குத்தான் கவிதை கம்பார்ட்மென்ட்ல உதை வாங்கினீங்க (அதுசரி அந்த "புத்துல பாம்பு மேட்டர்ல தப்பிச்சாச்சா?)
TTER நீங்கதானே என் மச்சான் புதுசு. இங்கேர்ந்து இறக்கி சகோ ரஃபிய கம்பார்ட்மென்ட்ல ஏத்திவிட்டா குறைஞ்சா போய்டுவீங்க. (அ.அ.காக்கா மன்னிக்கனும் உங்க ஏரியாவுல தொல்லை தருவதற்கு)
---------------------------------------------------
 அஸ்ஸலாமு அலைக்கும்.போகப்போற நோக்(கு)கம் ஒன்னா இருந்தா பரிசோதகர்ட சொல்லி சமாளிச்சிக்கிடலாம்.
Wednesday, November 03, 2010 11:01:00 AM

crown சொன்னது…
அஸ்ஸலாமு அலைக்கும்.போகப்போற நோக்(கு)கம் ஒன்னா இருந்தா ரஃபியா காக்காவும் no come னு சொல்லமாட்டாங்க.காரணம் இங்கு நோக்கம் தான் முக்கியம் என்பது தெரிந்தவர்கள்தானே அவர்கள்.
Wednesday, November 03, 2010 11:05:00 AM

அபுஇபுறாஹிம் சொன்னது…
கவிக் காக்கா: அதிரைநிருபரில் சோதனைகள் இல்லை, ஆனாலசுயபரி(சுத்த)சோதனை அவரவர்களாலே செய்யப் படுகிறதே தாங்கள் தான் கண்டும் வருகிறீர்களே :)

பாம்பு புத்துல கைய விடல அவ்வ்வ்வ்வ்வ்ளோ பயம்... ! :))
கிரவுனு வச்சாலும் நச்சுன்னு வைப்பே(டா)ப்பா "no come" இதைத்தான் நோக்கம்(னு) சொல்லுறதோ ! காவேயிரில தண்ணி கேட்டா என் காதுல இருக்குன்னு சொன்னவனாச்சே !!
Wednesday, November 03, 2010 11:25:00 AM

ZAKIR HUSSAIN சொன்னது…
அது என்னப்பா 'கம்பார்ட்மென்ட் / புத்துலெ பாம்பு" ஒன்னும் வெலங்கலியே...
Wednesday, November 03, 2010 1:54:00 PM

அபுஇபுறாஹிம் சொன்னது…
ஆஹா ஜாஹிர் காக்கா A/C கம்பார்ட்மெண்டிலா இருந்திய, சரி சரி இப்போ என்ன செய்றீய காலம் கலிகாலம் கவிதை ஸ்டேஷனின் ஒரு லூக்கும், அதிரை நகைச்சுவையாளர்கள் ஸ்டேஷனில் ஒரு லுக்கும் விட்டுட்டு இங்கே வந்திங்கன்னா பயணம் சூப்பரா இருக்கும் !
Wednesday, November 03, 2010 2:13:00 PM

Shahulhameed சொன்னது…
எங்கள் தெருவில் ஓடவி என்று ஒருவன் இருந்தான் (தற்போதும் இருக்கிறான்)வெளிநாட்டில் இருந்து யார் வந்தாலும் பெட்டி தூக்கி கொண்டு வருவது அவன் தான் கொடுக்கும் காசை வாங்கிக் கொண்டு "உண்டு உண்டு அமத்து" என்று சொல்லிவிட்டு போவான் இவனுக்கு வீட்டில் சோறு கொடுப்பதாக இருந்தால் மேஸ்திரி வைத்து தான் சமைக்க வேண்டும்.
    எங்கு விருந்து நடந்தாலும் இவனுக்கு ஒரு ஷஹன் சோறும் இரண்டு மல்லா கறியும் கண்டிப்பாக உண்டு சாப்பாட்டை கொடுத்தும் "உண்டு உண்டு அமத்து" என்று சொல்லிவிட்டுதான் சாப்பிட ஆரம்பிப்பான்.
Wednesday, November 03, 2010 4:11:00 PM

crown சொன்னது…
Shahulhameed சொன்னது…
எங்கள் தெருவில் ஓடவி என்று ஒருவன் இருந்தான் (தற்போதும் இருக்கிறான்)வெளிநாட்டில் இருந்து யார் வந்தாலும் பெட்டி தூக்கி கொண்டு வருவது அவன் தான் கொடுக்கும் காசை வாங்கிக் கொண்டு "உண்டு உண்டு அமத்து" என்று சொல்லிவிட்டு போவான் இவனுக்கு வீட்டில் சோறு கொடுப்பதாக இருந்தால் மேஸ்திரி வைத்து தான் சமைக்க வேண்டும்.
    எங்கு விருந்து நடந்தாலும் இவனுக்கு ஒரு ஷஹன் சோறும் இரண்டு மல்லா கறியும் கண்டிப்பாக உண்டு சாப்பாட்டை கொடுத்தும் "உண்டு உண்டு அமத்து" என்று சொல்லிவிட்டுதான் சாப்பிட ஆரம்பிப்பான்.
    -------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்.ஓனிடாடீவி பிசாசை எப்படி எளிதில் மறக்க முடியாதோ அது போலவே ஓடாவி.அவரின் பிம்பம் தோன்றி மறைகிறது.உண்டு,உண்டு,அமத்து ரொம்ப சமத்து போங்க....
Wednesday, November 03, 2010 8:25:00 PM

jalal சொன்னது…
தும்பி அபுஇபுறாஹிம் (சாரிமா டங்க் ஜஸ்ட் ஸிலிப்பாயிடுச்சு)
தம்பி அபுஇபுறாஹிம்..,
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..,)
அடுத்த கம்ப்பார்மென்ட் கொஞ்சம் குளிர்ச்சியா இருந்துச்சு அதான் மாறிட்டேன்............! ...? (நீங்கவேற ஏசி கோச் தாம்மா)
    குளிரு அதான் எல்லாமே ஸிலிப்பாவுது.
Thursday, November 04, 2010 6:24:00 AM

அபுஇபுறாஹிம் சொன்னது…
ஜலால் காக்கா நீங்க cool sleepingதான் தெரியும் அதான் நாங்க உறங்கியதும் ஏறியிருக்கீங்க (உங்க நேரம் அப்படி usa time) பரவாயில்லை உங்கள் பாசக்கார மச்சான்ஸ் இருக்காங்க அவங்க கம்பார்மெண்டிலும் ஏசி போடச் சொல்லிடுவோம் ! cool smile :)
Thursday, November 04, 2010 7:16:00 AM

crown சொன்னது…
அபுஇபுறாஹிம் சொன்னது…
ஜலால் காக்கா நீங்க cool sleepingதான் தெரியும் அதான் நாங்க உறங்கியதும் ஏறியிருக்கீங்க (உங்க நேரம் அப்படி usa time) பரவாயில்லை உங்கள் பாசக்கார மச்சான்ஸ் இருக்காங்க அவங்க கம்பார்மெண்டிலும் ஏசி போடச் சொல்லிடுவோம் ! cool smile :)
-----------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். நான் நம்ப மட்டேன் பெரியவங்கல நீங்க "ஏசி" நான் பார்ததில்லை,"பேசி"ப்பார்தேன்னு சொல்லுங்க.உங்களுக்கும் டங்க் ஸிப்பாயிட்டுச்சா?(சும்மா தாமஸூக்குதான்). cool smile plz.
Thursday, November 04, 2010 7:56:00 AM
அதிரை அஹ்மது சொன்னது…
அன்புச் சகோதரர்களே! தயை கூர்ந்து தலைப்புக்குத் தொடர்பற்ற பின்னூட்டங்களைத் தவிருங்கள். தலைப்புடன் ஒட்டிய நகைச்சுவைகளுக்கு நம்மூரில் பஞ்சமா?
Thursday, November 04, 2010 9:44:00 AM

jalal சொன்னது…

    தம்பி...அ அ அ அ அ அச்ச்ச்ச்ச்சு (அல்ஹம்துலில்லா) அ அ அ அ அச்ச்ச்ச்சு (அல்ஹ்ம்துலில்லாஹ்) அ அ அ அச்ச்ச்சு (அல்ஹ்ம்துலில்லா).இம்ம்ம்ம்ம்ம்ம்ம்
    அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..,)
    தம்பி அபுஇபுறாஹிம், க்ரவுன்
    இரண்டுபேரும் சேர்ந்து வைத்த கூல்ல தலையை தூக்க முடியலமா முதலில் டாக்டர்கிட்ட போய்ட்டு வந்துடுறேன்
Thursday, November 04, 2010 9:48:00 AM

அபுஇபுறாஹிம் சொன்னது…
அதிரை அஹ்மது சொன்னது…
    அன்புச் சகோதரர்களே! தயை கூர்ந்து தலைப்புக்குத் தொடர்பற்ற பின்னூட்டங்களைத் தவிருங்கள். தலைப்புடன் ஒட்டிய நகைச்சுவைகளுக்கு நம்மூரில் பஞ்சமா? ///

    (எங்கள் அன்பின் மாமா) கவனத்தில் ஏற்றோம் (இனிமேல் தவிர்த்துக் கொள்கிறேன் sorry) !

    நம்மூரில் அ.க. (பெயரைச் சுருக்கியிருக்கேன்) இன்னும் இருக்கிறார் அப்படியே ! நான் ஊருக்குச் சென்றிருக்கும் போது என்னை வழியில் கண்டார் வீட்டுக்கு வந்து பார்க்கிறேன் என்று சொல்லிவிட்டு வீட்டிற்கும் வந்தார்... அவரிடம் பேசிக் கொண்டிருக்கும்போது கேட்டார் என்னிடம்.

    "ரிட்டர்னுலதானே வந்திருக்கே"

    "ஆமா காக்கா" என்றேன்

    "அதுதான் நல்லது" என்று சொன்னவர் ஏன் அப்படிச் சொல்றீங்கன்னு கேட்டேன்.

    அதற்கு அவர் "ரிட்டர்னு தெரிஞ்சாதான் மாமியா வீட்டு ரூமில டேபில் இருக்கும் மூடிபோட்ட தண்ணீர் கூஜா இருக்கும், ஐஸ்வாட்டர் கிடைக்கும், காலையில ஈரல் கிடைக்கும்" ன்னு சிரிப்போடு அடுக்கிக் கொண்டே சென்றார்..

    நானும் ரசித்துக் கொண்டே ஏன் காக்கா அப்போ ரிட்டர்ன் இல்லைன்னா என்னா நடக்கும் கேட்டேன்

    "அட நீ வேற முதல் நாள் இருந்த சேர் அடுத்த நாள் காணாமல் போகும், டேபில் போட்டிருந்து விரிப்பு காணாமல் போகும், கூஜா சொம்பாக மாறும், டேபிளும் அடுத்த நாள் வெளியிலெடுக்கப் பட்டுவிடும், ஜன்னல் திரை கழற்றப் படும், மாதங்கள் ஒன்றோ இரண்டோ கழிந்ததும் அறை வாசல் கதவில் உட்கார்ந்து கொண்டு யாரோ முனுமுனுப்பதுபது போல் பிரமை வரும்... " அடுக்கிக் கொண்டே சென்றார் என்னால் அவர் சொல்லி வந்த பேச்சு நடையே அடக்க முடியாத சிரிப்பை வரவாழைத்து..

    இங்கே எப்படி ? smileலாவது வருகிறதா ?
Thursday, November 04, 2010 10:07:00 AM

அதிரை அஹ்மது சொன்னது…
Excellent!
Thursday, November 04, 2010 10:34:00 AM

Mansoor சொன்னது…
அது மட்டுமா, சோறு கூப்பன் அரிசியில் ஆக்கப்படும், வேட்டி பழுத்து போகும், ஆனத்தில்()உப்பு குறையும் இதெல்லாம் சொல்லாம விட்டுட்டார அவர் ஸ்மைல்
Friday, November 05, 2010 4:20:00 AM

Mansoor சொன்னது…
மாமா அவர்களுக்கு, தாங்களின் இந்த ஆக்கத்தை படிக்கும் போது எனக்கு பக்கத்தில் இருந்து கதைத்தது போல் இருந்தது, மேலும் இது போன்றா ஆக்கங்கள் நிறைய எழுத என்னுடைய துஆக்கல் என்னெறும்
Friday, November 05, 2010 4:24:00 AM

Rafia சொன்னது…

    பின்னூட்டம் அனுப்பிய அனைவருக்கும் நன்றி!
    US யாத்ரா பற்றி எல்ல்ல்லல்ல்ல்லாத்தையும் எழுதச்சொல்லி
    உசுப்பேத்தி விட்டுடீன்கள்.இன்ஷா அல்லா விரைவில் பகுதி பகுதியாக எழுதி
    அனுப்புகிறேன்..தற்போது சாச்சா கண்ட நகைச்சுவையாளர்கள் பகுதி அருமை.இன்னும் கச்சுமாமவன்,அம்மாக்கல்லன்.அரக்கல்லு,ஆலடிதேருப்பகுதில்
    பிரசுத்தியான காக்கரு(லேடி)போன்றோரைப் பற்றி கூட எழுதலாம்.
Saturday, November 06, 2010 2:27:00 AM

Read more...

Wednesday, 3 November 2010

அதிரைப்பட்டினத்தின் ராஜ வைத்தியர் கலந்தர் மறைக்காயர் !அஹ்மது அமீன்

அதிரைப்பட்டினத்தில் பிரபல்யமானவர்களில் 'கலந்தர் மறைக்காயர்'அவர்களும் ஒருவர் (அவர்களின் குடும்பம் கலந்தர் மறைக்காயர் குடும்பம் என்று அழைக்கப்படுகிறது)  அவர்களின் இயற்பெயர் நல்ல அபூபக்கர். அவர்கள் நாட்டு வைத்தியத்தில் மிகச்சிறந்து விளங்கினார்கள். அவர்கள் கண்டு பிடித்த 'சண்டமாதுர செந்தூரம்' மிகவும் பிரசித்தி பெற்றது.

அக்காலத்தில் தஞ்சாவூர் மஹாராஜா குடும்பத்தினருக்கும் மருத்துவம் பார்த்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களின் வழிதோன்றல்    குடும்பத்தில் சிலர் இன்றும்   செந்தூரம் செய்கிறார்கள். பல நோய்களுக்குக் கைகண்ட மருந்தாகத் திகழ்கிறது. அதிரைப்பட்டினம் மக்கள் மட்டுமல்லாது, சுற்றுப்புர கிராமங்களிலிருந்தும் மக்கள் மருந்த்துவம் பெற்று சுகம் கண்டனர்.

இன்ஷாஅல்லாஹ் அவர்களைப்பற்றிய விரிவான தகவகள் விரைவில்...

Read more...
ங்கு பதியப்படும் வரலாற்று தகவல்களில் மாற்று கருத்து இருப்பின் பின்னூட்டமாக எழுதவும். "அதிரைவரலாறு" நூல்வடிவம் பெறும்போது அவற்றையும் சேர்த்துக்கொள்ளப்படும்.

எவ்வழியே

முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.எனவே,இந்த (அதிரைவரலாறு) தளத்திலிருந்து நேரடியாகவோ மறைமுகமாகவோ காப்பி பேஸ்ட் செய்யக்கூடாது. தகவலுக்காக சுட்டி வழங்கலாம்.

  © Blogger template AutumnFall by Ourblogtemplates.com 2008

Back to TOP